
தோனியின் கடமை
சிஎஸ்கே தன் மீது வைத்த நம்பிக்கைக்காக கேப்டன் எம்.எஸ்.தோனி தனது கடமையையும் மீறி பல்வேறு விஷயங்களை செய்துக்கொடுத்து வருகிறார். சமீபத்தில் ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும் என சென்னைக்கு வந்து திட்டம் போட்டுக்கொடுத்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவின.

முன்கூட்டியே பயிற்சி
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு தற்போதே தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். தனது சொந்த ஊரான ராஞ்சியில் வலைக்குள் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதுவும் இந்த முறை அதிரடிக்கு தயாராகாமல், முழுக்க முழுக்க தரையோடு பவுண்டரிகளுக்கு விரட்டும் ஷாட்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

பெரும் பிரச்சினை
ஏனென்றால் கடந்த சீசன்களில் தோனிக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது பவுண்டரிகள் தான். முன்பு போன்று அவரால் கட் ஷாட்கள் மூலம் பவுண்டரிகளை குவிக்க முடியவில்லை. இன்சைட் எட்ஜ், அல்லது பேட்டில் எட்ஜாகி விக்கெட்டை பறிகொடுத்துவிடுகிறார். எனவே அதனை சரிசெய்யவே இந்த முறை முன்கூட்டியே பயிற்சியை தொடங்கியுள்ளார்.

கடைசி ஐபிஎல் சீசன்
தோனிக்கு 2022ம் ஆண்டு தொடரே கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம். சென்னையில் தான் தனது கடைசி போட்டி இருக்கும் என அவர் கூறியிருந்த நிலையில் இந்தியாவில் முழு போட்டியை நடத்தவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துவிட்டது. எனவே இந்தாண்டு ஒரு சிறப்பான ஆட்டத்தை காட்டிவிட்டு, தோனி விடைபெறலாம்.


Click it and Unblock the Notifications