சென்னை: ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் உலக சாம்பியன்களான சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஆயுஷ் மாத்ரே ஆகியோரை கௌரவித்தது. சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மூன்று ஐசிசி பட்டங்களை வென்ற முன்னாள் இந்திய கேப்டன் தோனி அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
அந்த பரிசில் விசில் கோலா உடன், அவர்களது செயலபாடுகளை பாராட்டி சில வார்த்தைகள் இடம்பெற்று இருந்தது. சாம்சன் மற்றும் துபே இருவரும், அண்மையில் அகமதாபாத்தில் நடந்த 2026 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இருந்தனர். 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா, பட்டத்தைத் தக்கவைத்த முதல் அணியாக சாதனை படைத்தது.

ஆரம்பப் போட்டிகளில் இடம்பெறாத சாம்சன், டி20 உலகக் கோப்பைப் பட்டத்தை இந்தியாவுக்கு வழங்கி வரலாற்று மீள்வருகைச் செய்தார். இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 89 ரன்கள் அடித்து, தனது நிலையான ஆட்டத்திற்காக 'தொடரின் நாயகன்' விருதை வென்றார்.

இந்த வரலாற்று வெற்றிக்கு துபேவும் முக்கியப் பங்காற்றினார். அவரது மத்திய வரிசை ஆட்டங்கள், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணிக்கு உத்வேகம் அளித்து, சொந்த மண்ணில் வரலாறு படைக்க உதவியது.
ஆயுஷ் மாத்ரே 2026 பிப்ரவரியில் இந்தியாவின் ஆறாவது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்குத் தலைமை தாங்கினார். ஹராரேவில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அரை சதம் அடித்ததோடு, இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற உதவினார்.
ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன்களான சிஎஸ்கே, மார்ச் 22 அன்று 'ரோர் 2026' ரசிகர் சந்திப்பில் முன்னாள் நட்சத்திரங்களுடன் இணைந்து ஆயத்தப்பணிகளைத் தொடங்கியது. சிஎஸ்கேவின் 2026 ஐபிஎல் பயணம் மார்ச் 30 அன்று குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராகத் தொடங்கவுள்ளது.

ராஜஸ்தான் மோதலுக்குப் பிறகு, சிஎஸ்கே ஏப்ரல் 3 அன்று பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியையும், ஏப்ரல் 5 அன்று நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியையும், ஏப்ரல் 11 அன்று டெல்லி கேபிடள்ஸ் (DC) அணியையும் சந்திக்கவுள்ளது.