
4 ஆண்டுகள்
அதேபோல் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி ஐபிஎல் தொடரை விளையாடுகிறது. சுமார் ஆயிரத்து 400 நாட்களுக்கு பின் தோனி மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்க உள்ளார். அதேபோல் சென்னை அணியின் கேப்டன் தோனி பங்கேற்கும் கடைசி ஐபிஎல் தொடரும் இதுவே என்பதால், தோனியை நேரில் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

சென்னையில் தோனி?
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடருக்கான மார்ச் 2ம் தேதியே தோனி சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வரும் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் பங்கேற்க உள்ளார். இவருடன் இளம் வீரர்களும், தீபக் சஹார் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

40 ஆயிரம் ரசிகர்கள்
இதனிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எவ்வளவு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கேள்வி இருந்தது. அதற்கான விடையை சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். இம்முறை சேப்பாக்கம் மைதானத்தில் 40 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
40 ஆயிரம் ரசிகர்களின் கரகோஷத்தில் தல தோனி களமிறங்கினால் எப்படி இருக்கும் என்று இப்போதே ரசிகர்கள் கற்பனை செய்யத் தொடங்கிவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல் பயிற்சியின் போது சென்னை அணியை நேரில் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அப்படி அனுமதிக்கப்பட்டால், ஐபிஎல் திருவிழா சென்னையில் முன்னதாக தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











