
சிஎஸ்கே பட்டியல்
சென்னை அணியில் இருந்து சீனியர் வீரர் அம்பத்தி ராயுடு ஏற்கனவே ஓய்வை அறிவித்திருந்தார். இது போதாது என்பது போல நட்சத்திர வீரர் டுவைன் பிராவோவை கழட்டிவிட்டு அதிர்ச்சி கொடுத்தது. இதே போல கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே உள்ளிட்ட வீரர்களும் விடுவித்திருந்தனர். எந்தவித ஓய்வும் அறிவிக்காத பிராவோவை நீக்கியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கேவின் விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். அதில், டுவைன் பிராவோ சிறந்த வீரர் தான், ஆனால் அவரின் வயதை கருத்தில் கொண்டு தான் அணியில் இருந்து நீக்கியுள்ளோம். 39 வயதாகும் பிராவோ இனியும் சிறப்பாக விளையாடுவாரா என்பதில் தோனிக்கு சந்தேகம் உள்ளது என்ற வகையில் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

ஏன் ராபின் உத்தப்பா?
வயதை காரணம் காட்ட வேண்டுமென்றால் ராபின் உத்தப்பா-க்கு மட்டும் ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டது என்ற கேள்வி எழலாம். ஏனென்றால் அம்பத்தி ராயுடுவுக்கு 37 வயது ஆகிவிட்டது. இதற்கு பதிலளித்த காசி விஸ்வநாதன், கேப்டன் தோனி ராபின் உத்தப்பா மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார். அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறோம் எனக்கூறியுள்ளார்.

மாஸ்டர் ப்ளான்
ஏலத்திற்கு விடப்பட்டுள்ள டுவைன் பிராவோவை, மற்ற அணிகளும் ஏலம் எடுப்பது சற்று சந்தேகமான ஒன்று தான். எனவே யாரும் வாங்காத பிராவோவை மிகவும் குறைந்த விலையில் கூட சிஎஸ்கே எடுத்துக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தோனிக்கு பல இக்கட்டான சூழலில் உதவியவர் பிராவோ என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











