சிஎஸ்கே அணி பிளமிங்கை கைவிட்டது நல்ல முடிவு.. நவீன காலத்துக்கு ஏற்ற கோட்ச் தேவை.. பத்ரிநாத் கருத்து
மும்பை: சிஎஸ்கே அணிக்கு தற்போது சிறந்த தொழில்நுட்ப மற்றும் உத்திகள் தெரிந்த புதிய டி20 பயிற்சியாளர் தேவை என்று முன்னாள் பேட்ஸ்மேனுமான சுப்பிரமணியம் பத்ரிநா தெரிவித்துள்ளார். ஸ்டீபன் பிளெமிங் ஒரு சிறந்த பயிற்சியாளராக இருந்தபோதிலும், தற்போதைய சூழ்நிலையில் சிஎஸ்கே அணியில் அவரது காலம் முடிந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டீபன் பிளெமிங் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளாக சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் கடுமையாக தடுமாறி வருகிறது. குறிப்பாக, 2025 ஐபிஎல் தொடரில் புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி வரலாற்றிலேயே முதல் முறையாக கடைசி இடத்தைப் பிடித்தது.

இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய பத்ரிநாத், "தற்போது பல இளம் இந்திய வீரர்கள் அணிக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, சிறந்த தொழில்நுட்ப மற்றும் உத்திகள் சார்ந்த திறமையுள்ள டி20 பயிற்சியாளர் சிஎஸ்கேவுக்கு தேவை. சரியான வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை உருவாக்குவதன் மூலமே ஒரு வலுவான அணியை உருவாக்க முடியும்" என்று கூறினார்.
"தோனி இல்லாத தற்போதைய சிஎஸ்கே அணியில், வெறும் வீரர்களைக் கையாளுவது மட்டுமே பயிற்சியாளருக்குப் போதாது. வீரர்களை தொழில்நுட்ப ரீதியாக வழிநடத்தும் ஒரு பயிற்சியாளர் இப்போது தேவைப்படுகிறார். எனவே, கடினமான முடிவாக இருந்தாலும், பிளெமிங்கை விடுவிக்க எடுத்த முடிவு சரியானதுதான்" என்று பத்ரிநாத் தெரிவித்தார்.
ஸ்டீபன் பிளெமிங் தனது பயிற்சியின் கீழ் வென்ற 5 ஐபிஎல் கோப்பைகளையும் பெற்றார். ஆனால், 2024 சீசனுக்கு முன்னதாக தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு, சிஎஸ்கே அணியின் ஆட்டம் சரிவை நோக்கிச் சென்றது. தொடர்ந்து மூன்று சீசன்களாக சிஎஸ்கே ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications

