
புனேயில் இரண்டாவது ஆட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் போராட்டங்களால், சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவிருந்த ஆட்டங்கள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன. புதிதாக தத்தெடுத்த சொந்த மைதானமான புனேவில் சிஎஸ்கேவுக்கு இது இரண்டாவது ஆட்டமாகும். முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானை வென்றது.

சிஎஸ்கே கொடி பறக்கும்
இந்த சீசனில் மிகவும் வலுவான மற்றும் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே உள்ளது. அதே நேரத்தில் நடப்பு சாம்பியன் மும்பை, தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. முதல் ஆட்டத்தைப் போலவே, இன்றைய ஆட்டத்திலும் சிஎஸ்கேவின் கொடி பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சிஎஸ்கே அதிரடி ரன்குவிப்பு
டாஸை வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. வாட்சன் 12, ராயுடு 46, தோனி 26, பிராவோ ரன் எடுக்காமல், சாம் பில்லிங்ஸ் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 75 ரன்கள் எடுத்தார். குருணால் பாண்டயா, மெக்ளினாகன் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

மீண்டும் திரில் வெற்றி
170 ரன்கள் வெற்றி இலக்குடன் மும்பை பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. 19.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 173 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வென்றது. சூர்யகுமார் 44, லூயிஸ் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோஹித் சர்மா 56 ரன்களும், ஹார்திக் பாண்டயா 16 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
நடப்பு சாம்பியனான மும்பைக்கு இது இந்த சீசனில் இரண்டாவது வெற்றியாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.


Click it and Unblock the Notifications
