For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மஜா வீரர்களை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. ஜோகனஸ்பர்க் அணி வீரர்கள் பட்டியல்.. முழு விவரம்

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் புதிய டி20 தொடரில் சிஎஸ்கே அணி ஜோகனஸ்பர்க் நகரத்தை மையமாக வைத்து புதிய அணி ஒன்றை வாங்கியுள்ளது.

Recommended Video

CSK-வின் CSA T20 வேட்டை! Faf, Moeen வருகை | Aanee's Appeal | *Cricket

அதற்கு ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஜோகனஸ்பர்க் அணிக்காக சிஎஸ்கே அணி நிர்வாகம் 5 வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரிய விதிப்படி டி20 தொடரில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களில் இருந்து நான்கு பேரை தேர்வு செய்யலாம்.

சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. மீண்டும் திரும்புகிறார் டுபிளஸிஸ்.. வேற ஆச்சரியமும் இருக்குசிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. மீண்டும் திரும்புகிறார் டுபிளஸிஸ்.. வேற ஆச்சரியமும் இருக்கு

டுபிளஸிஸ்

டுபிளஸிஸ்

அதில் ஒரு சர்வதேச தென்னாப்பிரிக்கா வீரரும், ஒரு உள்ளூர் தென்னாப்பிரிக்க வீரரும் அடங்குவார்கள். மற்ற இரண்டு வீரர்கள் வெவ்வேறு நாட்டுச் சேர்ந்த வீரர்கள் ஆக இருக்க வேண்டும். இந்த விதியின்படி தற்போது சிஎஸ்கே அணி 5 வீரர்களை தேர்வு செய்துள்ளது. முதல்வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும் தற்போது ஆர்சிபி கேப்டனாக இருக்கும் டுபிளசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிஎஸ்கே நம்பிக்கை

சிஎஸ்கே நம்பிக்கை

டுபிளசிஸ் கேப்டனாக புதிய அணிக்கு செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அனுபவம் உள்ளதால் அவர் புதிய அணியையும் சிறப்பாக கட்டமைத்து வெற்றியை தேடி தருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், டுபிளசிஸ் இன் அனுபவம் விலை மதிப்பற்றது என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மொயின் அலி

மொயின் அலி

சிஎஸ்கே அணி இரண்டாவது வீரராக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மோயின் அலியை தேர்வு செய்துள்ளது.மோயின் அலியும் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருபவர்.மேலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிரட்டலாக விளையாடக்கூடிய அனுபவ சாலி என்பதால் தென்னாப்பிரிக்கா டி20 தொடரிலும் அவரை ஒப்பந்தம் செய்து விட்டதாக காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

மற்ற வீரர்கள்

மற்ற வீரர்கள்

மூன்றாவது வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் மாயாஜால சுழற்பந்து பந்துவீச்சாளரும் சிஎஸ்கே வீரருமான மகேஷ் தீக்சனாவை ஒப்பந்தம் செய்துள்ளது. நான்காவது வீரராக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் ரோமியோ செஃபர்டும், தென்னாப்பிரிக்கா அணியின் உள்ளூர் வீரராக ஆல்ரவுண்டர் ஜெரால்ட் கோஸ்ட்லியை சிஎஸ்கே நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. மற்ற வீரர்களை செப்டம்பர் மாதம் நடைபெறும் நேரத்தில் தேர்வு செய்ய உள்ளதாக அந்த அணி குறிப்பிட்டுள்ளது.

Story first published: Sunday, August 21, 2022, 20:28 [IST]
Other articles published on Aug 21, 2022
English summary
CSK New Team Johannesburg picks 5 key players ahead of auctionமஜா வீரர்களை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. ஜோகனஸ்பர்க் அணி வீரர்கள் பட்டியல்.. முழு விவரம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X