For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்க என்ன கால்நடைகளா..? தயவு செய்து ஐபிஎல் ஏலம் வேண்டாம்..கொந்தளித்த சிஎஸ்கே வீரர்

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலம் மூலம் ஏழ்மையில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களை ஒரே இரவில் பணக்காரர் ஆகிறார்கள்.

பல வீரர்களின் குடும்பத்தின் நிலையை ஐபிஎல் ஏலம் மாற்றினாலும், அதன் மீது ஒரு குற்றச்சாட்டு காலம் காலமாக வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா ஏலத்தை நிறுத்திவிட்டு, புதிய முறையை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மனதளவில் பாதிப்பு

மனதளவில் பாதிப்பு

ஐபிஎல் ஏலம் வீரர்கள் மனதளவை பெரும் அளவில் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார். தேர்வு எழுதி, அதற்கான முடிவுக்காக காத்து கொண்டு இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு சென்றவர்கள் தான் திறமையானவர்கள் என்றும், ஏலம் போகாதவர்கள் திறமையில்லாத வீரர்கள் என்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாக ராபின் உத்தப்பா கூறினார்.

உரிய மரியாதை

உரிய மரியாதை

ஐபிஎல் ஏலத்தில் தான் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று தனது மகன் பிரார்த்தனை செய்ததாக கூறினார். தம்மை பொறுத்தவரை சிஎஸ்கே அணிக்காக நான் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். சிஎஸ்கே அணியில் இருக்கும் போது தான் உரிய மரியாதை கிடைக்கிறது. நான் இன்னும் சிறப்பாக விளையாடுகிறேன்.

கால்நடைகள் போல் ஏலம்

கால்நடைகள் போல் ஏலம்

என்னை கேட்டால் ஐபிஎல் மெகா ஏலத்தை நிறுத்த வேண்டும். எங்களை ஒரு கால்நடைகள் போல் ஏலம் விடுகிறார்கள். ஏலத்தில் நமது பெயர் முதலில் இருந்தால் அதிக பணம் கிடைக்கும். இல்லையென்றால் குறைந்த பணம் தான் கிடைக்கும். இதில் எங்கே சமம் வாய்ப்பு கிடைக்கிறது? ஐபிஎல் ஏலத்தை கைவிட்டு, அதற்கு பதிலாக Draft முறையை கொண்டு வர வேண்டும்.

Recommended Video

IPL 2022: மிரட்ட போகும் Windies Players யாரு? | OneIndia Tamil
ஏலம் வேண்டாம்

ஏலம் வேண்டாம்

Draft முறை தான் வீரர்களுக்கு மரியாதைக்குரியதாக இருக்கும். இது குறித்து சம்பந்தபட்டவர்கள் ஆலோசனை செய்ய வேண்டும். நமது ஆட்டத்தை வைத்து தான் திறமையை கணக்கிட வேண்டுமே தவிர, எவ்வளவு ஏலத்திற்கு சென்றோம் என்பதை வைத்து கணக்கிட கூடாது. ஏலத்தின் விலை போகாத வீரர்களின் நம்பிக்கையே உருக்குலைந்து இருக்கும். அவர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.

Story first published: Tuesday, February 22, 2022, 15:18 [IST]
Other articles published on Feb 22, 2022
English summary
CSK Player Robin uthappa upset with IPL Auction system for Picking Players நாங்க என்ன கால்நடைகளா..? தயவு செய்து ஐபிஎல் ஏலம் வேண்டாம்..? கொந்தளித்த சிஎஸ்கே வீரர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+