
சூப்பர் கிங்ஸ் அறிவிப்பு
இதைத் தொடர்ந்து நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது அணியில் டோணி உட்பட 5 வீரர்கள் தொடர்ந்தும் இடம்பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது.

கேப்டனாக டோணி
டோணி தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நீடிப்பார்.

யார் யார்?
டோணியுடன் சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, அஸ்வின் மற்றும் பிராவோ ஆகியோர் அணியில் நீடிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 12-ல் ஏலம்
ஐபிஎல்7வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த 12-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக பழைய வீரர்களை தக்க வைத்துக் கொள்வது பற்றி இதர அணிகளும் இன்று முடிவை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











