
ருத்துராஜ் காயம்
இதனால் ருத்துராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது சந்தேகம் ஏற்பட்டது. இதற்கு தகுந்தார் போல் ருத்துராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே நடத்தும் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை. இதனால் இம்முறை ருத்துராஜ் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியது.

உடல்தகுதி
அதன் பின்னர் ருத்துராஜ் கெய்க்வாட், ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ருத்துராஜ் கெய்க்வாட்க்கு எதிர்பார்த்தைவிட மிக விரைவாக காயம் குணமாகி வருகிறது. இதனால் அவர் உடல் தகுதியும் முன்னேறி வருகிறது.

சிஎஸ்கே அணி
இதனால், ருத்துராஜ் கெய்க்வாட் விரைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்ப உள்ளார். நாளையோ அல்லது நாளை மறுநாளோ ருத்துராஜ் கெய்க்வாட் சூரத்துககு சென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளார். அங்கு அவருக்கு உடல் தகுதி சோதனை நடத்தப்படும்.

முதல் போட்டி
இதில் பேட்டிங் பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்டால், வரும் 26ஆம் தேதி சிஎஸ்கே அணிக்காக முதல் போட்டியிலேயே அவர் பங்கேற்க உள்ளார். ருத்துராஜ் அணிக்கு திரும்புவதன் மூலம் சிஎஸ்கேவின் பலம் மேலும் அதிகரிக்கும். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











