For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

CSK: வாழ்நாளில் டெத் ஓவரில் பந்துவீசாத வீரரை ஓவர் வீச சொன்ன ருதுராஜ்.. பத்ரிநாத் சாடல்

சென்னை: ஐபிஎல் 2026 சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின்போது, சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் சர்ச்சைக்குரிய பந்துவீச்சு மாற்றங்களை முன்னாள் வீரர் பத்ரிநாத் கடுமையாக விமர்சித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிஎஸ்கே 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆர்சிபியின் பேட்டிங் இன்னிங்ஸின் முதல் 15 ஓவர்களில் சிறப்பாகச் செயல்பட்ட சிஎஸ்கே, கடைசி ஓவர்களில் தடுமாறிப் போனது.

குறிப்பாக, ஆர்சிபி கடைசி ஐந்து ஓவர்களில் 97 ரன்கள் குவித்தது. இதற்கு டிம் டேவிட் 25 பந்துகளில் 70* ரன்கள் விளாசி முக்கிய காரணமாக அமைந்தார். ஆஸ்திரேலிய வலது கை பேட்ஸ்மேனான அவர், ஜேமி ஓவர்டனின் 19வது ஓவரில் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து 30 ரன்கள் எடுத்தார்.

அந்த ஓவருக்கு முன்னதாக, ஓவர்டன் சிஎஸ்கேயின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகவே இருந்தார். தனது முதல் இரண்டு ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து கட்டுக்கோப்பாக வீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்சிபி போட்டிக்குப் பிறகு ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சி குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பத்ரிநாத், சில கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

IPL 2026: கொஞ்சம் உதவி கிடைத்திருந்தால் வென்று இருக்கலாம்.. கோபத்தில் ஹெல்மட்டை எறிந்த சிஎஸ்கே வீரர் ஓவர்டன்IPL 2026: கொஞ்சம் உதவி கிடைத்திருந்தால் வென்று இருக்கலாம்.. கோபத்தில் ஹெல்மட்டை எறிந்த சிஎஸ்கே வீரர் ஓவர்டன்

"அவர் ஓவர்டனுக்கு 19வது ஓவரைக் கொடுத்தார். ஓவர்டன் தனது வாழ்க்கையில் ஒருபோதும் டெத் ஓவர்களை வீசியதில்லை. ரவுண்ட் தி விக்கெட்டில் வீசியதும் இல்லை, ஆனால் கெய்க்வாட் அதைச் செய்ய வைத்தார். கடைசி நான்கு ஓவர்களில் 92 ரன்கள் கொடுத்தது மிக அதிகம்," என்று பத்ரிநாத் வெளிப்படையாகக் கூறினார்.

' "துபே பேட்டிங் செய்தவரை, ஆர்சிபி சுயாஷ் சர்மாவை களமிறக்கவே இல்லை. ஆனால் துபே அவுட்டானவுடன் சுயாஷ் உள்ளே வந்தார். அதேநேரம், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் பட்டிதார் சுழற்பந்துவீச்சை சிறப்பாக விளையாடக்கூடியவர் என்பதை அறிந்தும், உடனடியாக நூர் அகமதுக்கு பந்தைக் கொடுத்தார். பட்டிதார் நூர் பந்தில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். இவைதான் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய விஷயங்கள்," என்று குறிப்பிட்டார்.

இறுதியில், ஆர்சிபி 20 ஓவர்களில் 250/3 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. சிஎஸ்கேயால் இந்த இலக்கை எட்ட முடியவில்லை. 207 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தொடர்ந்து மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது.நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் தங்களது தலைசிறந்த கேப்டன் தோனி இல்லாத பெரிய குறையை சிஎஸ்கே அணி உணர்வதாக சுப்ரமணியம் பத்ரிநாத் நம்புகிறார். 44 வயதான தோனி காயம் காரணமாக அணியின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடவில்லை.

CSK: சஞ்சு சாம்சன் அல்ல.. சிஎஸ்கே பிரச்சனையே இந்த 2 பேர் மட்டும் தான்.. இர்பான் பதான் தாக்குCSK: சஞ்சு சாம்சன் அல்ல.. சிஎஸ்கே பிரச்சனையே இந்த 2 பேர் மட்டும் தான்.. இர்பான் பதான் தாக்கு

சிஎஸ்கே அணி தென்னாப்பிரிக்க இளம் வீரர் பிரேவிஸ் இன்றி, தசைப்பிடிப்பு காரணமாக அவரும் விளையாடவில்லை. அணியின் தற்போதைய நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, இருவரும் முழு தகுதியுடன் இல்லாவிட்டாலும், அணியில் இடம்பெற வேண்டும் என்று பத்ரிநாத் வலியுறுத்தினார்.

“அவர்கள் தோனி இல்லாத வெற்றிடத்தை உணர்கிறார்கள். சிஎஸ்கேயின் உண்மையான தலைவராக அவர் இருந்தார். ஏலத்தில் எந்த வீரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உரிமையாளருக்கு வழிகாட்டுவார். தங்கம் எது பித்தளை எது என்று வேறுபடுத்தும் திறன் தோனியிடம் இருந்தது. அந்த திறமையான பார்வை தற்போது சிஎஸ்கே-விடம் இல்லை,” என்று பத்ரிநாத் கூறினார்.

“சிஎஸ்கே 100% ஃபிட் ஆக இல்லாவிட்டாலும், 45 வயது தோனியை அணியில் விளையாட வைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துவேன். பிரேவிஸுக்கும் அதேதான். இவர்கள் இருவரும் அணிக்குள் வந்தால், ஒருவித நேர்மறையான உணர்வு உருவாகலாம். அதே அணியையும் பந்துவீச்சு படையையும் தோனியிடம் கொடுத்தால், அவர் குறைந்தது 250 ரன்களை 220 அல்லது 225 ஆக குறைத்திருப்பார்.

IPL 2026: சிஎஸ்கே மீண்டு வர வாய்ப்பு குறைவு.. தர்ம சங்கடமாக இருந்ததால் வெளியேறினேன்- அஸ்வின் IPL 2026: சிஎஸ்கே மீண்டு வர வாய்ப்பு குறைவு.. தர்ம சங்கடமாக இருந்ததால் வெளியேறினேன்- அஸ்வின்

எனவே, 70% ஃபிட் ஆக இருக்கும் தோனி மற்றும் பிரேவிஸ் கூட விளையாட வேண்டும். இல்லையெனில், சிஎஸ்கேவின் இந்த சீசன் முடிவுக்கு வரலாம் என்று நான் அஞ்சுகிறேன்,” என்றார்.சிஎஸ்கே அணி தனது அடுத்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சென்னையின் சொந்த மைதானத்தில், ஏப்ரல் 11, சனிக்கிழமை அன்று எதிர்கொள்ளவுள்ளது.

Story first published: Monday, April 6, 2026, 16:35 [IST]
Other articles published on Apr 6, 2026
English summary
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்த நிலையில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் பந்துவீச்சு மாற்றங்களை முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக கடைசி ஓவர்களில் பந்துவீச்சாளர்களை கையாண்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அவர், எம்.எஸ். தோனி இல்லாத வெற்றிடத்தை அணி உணர்வதாகவும், 70 சதவீத உடல் தகுதியுடன் இருந்தாலும் தோனி அணிக்குள் வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் அணியில் நேர்மறையான உணர்வு உருவாகும் என்பது பத்ரிநாத்தின் கருத்தாக உள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+