பெங்களூரு:அஸ்வினை வைத்து மான்கட் முறையில் விக்கெட் எடுக்கலாம் என்று ஸ்டெய்ன் கலாய்த்து தள்ளியிருக்கிறார்.
ஐபிஎல் சீசன் மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 25ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டி இந்த ஐபிஎல் தொடரின் மறக்க முடியாத போட்டியாக மாறியது.
அந்த போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் பஞ்சாப் அஸ்வின் அவுட்டாக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அஸ்வின் செய்தது தவறு என்று ஒரு சிலரும், அவர் செய்தது தவறு இல்லை என்றும் கருத்துகள் உலா வந்தன.
How good will it be to have jofra archer , Jasprit Bumrah , Kagiso Rabada , Imran Tahir and R Ashwin as your bowling attack in an ipl team ?
— Prasanna (@prasannalara) 20 April 2019
இந்தச் சம்பவம் நடத்து ஒரு மாதமாகிய நிலையில் தற்போது மீண்டும் அது தொடர்பான பேச்சுகள் வலம் வர தொடங்கி இருக்கின்றன. பெங்களூரு அணியின் டேல் ஸ்டெயினிடம் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.
நான் சைவத்துக்கு மாறினேன்... அதனால எங்க டீம் ஜெயிச்சது.. என்னடா இது புதுக்கதை
அந்த கேள்வியில் ஐபிஎல்லில் ஆர்சர், பும்ரா, ரபாடா, இம்ரான் தாஹிர், அஸ்வின் ஆகியோர் ஒரே அணியில் இருந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார். அதற்கு ஸ்டெயின் பதிலளித்திருக்கிறார்.
அந்த பதில் இதுதான்: அவர்களை வைத்து விக்கெட்டுகளை இந்த மாதிரி எடுக்கலாம். ரபாடாவை கேட்ச்சாக்கலாம், இம்ரான் தாஹிரை எல்பிடபிள்யு ஆக்கலாம், அஸ்வினை மன்கட் முறையில் விக்கெட் எடுக்கலாம் என்று கூறினார்.