
இளம் படை
இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ளதால், இளம் வீரர்களை கொண்ட இந்திய ஏ அணி இலங்கை தொடரில் மோதவுள்ளது. விஜய் ஹசாரே மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை இதற்காக பிசிசிஐ களமிறக்கியுள்ளது.

இரு அணிகளின் பலம்
இந்நிலையில் இந்திய ஏ அணியை எதிர்கொள்வது குறித்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பேசியுள்ளார். அவர், இந்த போட்டியில் எந்த அணியும் ஒன்றைவிட மற்றொருன்று பலமாக இருக்கும் என தெரிவிக்க முடியாது. இரு அணிகளும் சரிசமமாக தான் விளங்கும். இந்திய அணியில் பல புதுமுக வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஐபிஎல்-ல் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், சர்வதேச போட்டிகளில் அவ்வளவாக விளையாடியது இல்லை.

குறைவான நேரம்
இலங்கை அணி மிகவும் தாமதாக அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டது குறித்து பேசிய அவர், எவ்வளவு தாமதமாக அணியின் விவரங்களை வெளியிடுகிறோமோ, அந்த அளவிற்கு நன்மைதான். ஏனென்றால் எதிரணி தயாராவதற்கு குறைவான நேரமே கிடைக்கும். அதிலும் குறிப்பாக இந்திய அணி வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடாத காரணத்தினால் அவர்கள் சற்று நன்றாகவே தயாராக வேண்டும் என தசுன் ஷனகா தெரிவித்துள்ளார்.
Recommended Video

வெற்றி வாய்ப்பு
இந்த தொடரை பொறுத்தவரை இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அணி சமீப காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ஊதிய பிரச்னை காரணமாக 2 சீனியர் வீரர்கள் வெளியேறியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் பயோ பபுள் விதிமுறைகளை மீறியதால் 3 சீனியர் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய அணிக்கு எதிராக ஒரு போட்டியில் இலங்கை வென்றால் கூட ஆச்சரியம் தான் என முன்னாள் வீரர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











