சிட்னியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடிய நிலையில், தாயகம் திரும்பிய நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. மே மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாரூப்ராவில் நடத்தப்பட்ட மது பரிசோதனையில் தோல்வியடைந்ததையடுத்து, அவர் சட்டப்பூர்வ மது அளவை விட இருமடங்கு அதிகமாக மது அருந்தியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை, வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026, ஏப்ரல் 5, ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில், மாரூப்ரா, மாலபார் சாலையில் வழக்கமான மூச்சுப் பரிசோதனைகள் நடந்து வந்தன. அப்போது, பரிசோதனை இடத்தை நெருங்கும் முன்பே ஒரு வேன் நிறுத்தப்பட்டு பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது” என்று குறிப்பிட்டது.

“போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவின் அதிகாரிகள் அந்த வாகனத்தை அணுகி, 39 வயதான டேவிட் வார்ன சாலை ஓரத்தில் மது அருந்தினாரா பரிசோதனை செய்தனர். அதில், நேர்மறையான முடிவு வந்தது” என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வார்னர், மே மாதம் நீதிமன்றத்தில் ஆஜராவார்.

டேவிட் வார்னர், 2024-ல் சர்வதேச கிரிக்கெட்டில் தனது விளையாட்டு வாழ்க்கையை முடித்துக்கொண்டு ஊடகத் துறைக்கு மாறியிருந்தார். 2024 ஜனவரியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கு நான்கு வாரங்கள் முன்னதாகவே அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது அணித் தேர்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது அவரது கிரிக்கெட் பயணத்தின் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற புத்தாண்டு டெஸ்ட் போட்டி அவரது கடைசி டெஸ்ட் ஆட்டமாக அமைந்தது. தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை 2024 கோடைக்குப் பிறகு நீட்டிக்க விரும்பாத வார்னர், உலகளாவிய டி20 தொடர்களில் மட்டும் கவனம் செலுத்த திட்டமிட்டிருப்பதாகவும் முன்னரே தெரிவித்திருந்தார்.