முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற நிலையில், அதில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது.
ராஜ்காட்டில் நாளை நடைபெறுகிறது
இந்த தொடரின் இரண்டாவது போட்டி ராஜ்காட்டில் நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற இந்தியா தீவிர முனைப்புடன் உள்ளது.
சிறப்பான போட்டி -வார்னர்
இதனிடையே ஐபிஎல் அணியான சன் ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்தியாவுடன் விளையாடுவது சிறப்பான போட்டியாக இருக்கும் என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
|
போன் பக்கத்திலேயே காத்திருப்பு
மேலும் விராட் கோலி தன்னை டின்னருக்கு அழைப்பார் என்று தான் போனுடன் காத்திருப்பதாகவும் டேவிட் வார்னர் கூறியுள்ளார். இந்த கோரிக்கைக்கு விராட் கோலி என்ன பதில் சொல்வார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.