கவனம்
பரோடா அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் குர்னால் பாண்டியா இருக்கிறார்.இவர்தான் அணி தேர்வில் முக்கிய பந்து வகிக்கிறார். இவர் அணிக்குள் மற்ற வீரர்களை மோசமாக நடத்துவதாக புகார் எழுந்தது. இளம் வீரர்களை இவர் மோசமாக நடத்துகிறார் என்று புகார் வைக்கப்பட்டது.
புகார்
முக்கியமாக அணியின் துணை கேப்டன் தீபக் ஹுடாவை இவர் தொடர்ந்து கிண்டல் செய்து மோசமாக நடத்தி இருக்கிறார். இவரின் தொல்லை தாங்க முடியாமல் பரோடா அணியில் இருந்தே தற்போது தீபக் ஹூடா வெளியேறிவிட்டார். சையது முஸ்தாக் கோப்பை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் தீபக் ஹூடா அணியில் இருந்தே வெளியேறினார்.
விசாரணை
இதை தொடர்ந்து தீபக் ஹூடாவிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அவர் அணியில் இருந்து வெளியேறியது ஏன் என்று விளக்கம் கேட்கப்பட்டு இருந்தது. அதில் பயிற்சியின் போது குர்னால் பாண்டியா மிகவும் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாகவும், அவமானப்படுத்தியதாகவும் தீபக் ஹூடா தெரிவித்து உள்ளார்.
பிரச்சனை
இந்த சம்பவம் பரோடா அணிக்குள் பெரிய பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விளக்கத்தை பரோடா அணி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஒழுக்கமின்மை காரணமாக பரோடா அணியின் இளம் வீரர் தீபக் ஹூடா தடை செய்யப்பட்டு இருக்கிறார். 2021ம் ஆண்டிற்கான முதல்தர போட்டிகளில் கலந்து கொள்வதில் இருந்து பரோடா அணி இவருக்கு தடை விதித்து உள்ளது.