
தவான் வெளியேற்றம்
டெல்லி அணியின் தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளை அகமது கைப்பற்றினார். தவான் வெளியேறிய பிறகு, முன்ரோ, ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி கைகோர்த்தது. முன்ரோ ஹைதராபாத் பந்துவீச்சை பதம் பார்த்தார்.

முன்ரோ அவுட்
4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என விளாசிக் கொண்டிருந்த அவர், 40 ரன்களில் அபிஷேக் சர்மா பந்தில் வீழ்ந்தார். அதன் பின்னர் ஸ்ரேயாஸ் அய்யருடன் கைகோர்த்தவர் ரிஷப் பன்ட். இருவரும் ஓரளவு ரன்களை எடுக்க தொடங்கினர்.

ஸ்ரேயாஸ் 45 ரன்கள்
அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த ஸ்ரேயாஸ் அய்யர் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பன்ட்டும் 23 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் அணியின் ரன் விகிதம் குறைந்தது.

வெற்றி இலக்கு
பின்வரிசை வீரர்கள் சரியாக சோபிக்காததால் பெரிய இலக்கை எட்டும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 155 ரன்களை எடுத்துள்ளது. 156 ரன்கள் வெற்றி இலக்கு என்பதால் ஹைதராபாத் அணி எளிதாக வெற்றி பெறும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications