
3 மாற்றங்கள்
அதே போல், பஞ்சாப் அணியும் இன்றைய போட்டியில் மூன்று மாற்றங்களுடன் களம் காண்கிறது. சாம் குர்ரேன் மீண்டும் பஞ்சாப் அணியில் இடம்பிடித்து உள்ளார்.

அதிரடியில் கெயில்
இதையடுத்து முதலில் பஞ்சாப் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ராகுலும், சிக்சர் மன்னன் கெயிலும் களம் கண்டனர். வழக்கம் போல அதிரடியை காட்டினார் கெய்ல்.

ஆட்டமிழந்தார் ராகுல்
பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் விரட்டினார். ஆனால் மறுபுறமோ... ராகுல் 12 ரன்களில் லமிச்சானே பந்தில் ஆட்டமிழந்தார். கெயிலுடன் மயங்க் அகர்வால் களம் கண்டார். ஆனால் அவரும் 2 ரன்களில் நடையை கட்டினார்.

2 விக்கெட்டுகள் காலி
50 ரன்களை எடுப்பதற்குள் பஞ்சாப் அணி 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. ஆனால்... அதிரடி மன்னன் கெயிலை நம்பியே பஞ்சாப் இருப்பதால் அணியின் ஸ்கோர் நிச்சயம் உயரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications