
பவுலர்கள்தான் முக்கியம்
டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள்தான் மிகவும் முக்கியமானவர்கள். அந்த வகையில் ஒரு அணியின் முக்கிய பவுலர்கள் சரியான நிலையில் இருக்க வேண்டியது அவசியம்.

5 பவுலர்கள்
அணியில் 6 பேட்ஸ்மேன், ஒரு விக்கெட் கீப்பர் இருந்தால், 500 ரன்களைக் கூட குவிக்க முடியும். ஆனால் ஒரு பந்து வீச்சாளர் குறைந்தால் கூட சிக்கலாகி விடும்.

டாப் 5 கலக்கனும்
நமது பேட்ஸ்மேன்களில் முதல் வரிசையில் உள்ள 5 பேரும் சிறப்பாகவும், பொறுப்பாகவும் ஆடி ரன்களைக் குவிக்க வேண்டியது அவசியம். அதேபோல விக்கெட் கீப்பரும் பேட் செய்ய வேண்டும். ஆல் ரவுண்டர்கள் சிறப்பாக ஆடியாக வேண்டும்.

பவுலர்தான் "கிங்"
டெஸ்ட் போட்டிகளில் பவுலர்கள்தான் முக்கியம். ஒரு பந்து வீச்சாளரால் போட்டியை எளிதாக வென்று தர முடியும். ஆனால் ஒரு பேட்ஸ்மேனால் அதைச் செய்ய முடியாது. பவுலர்கள்தான் எந்த சமயத்திலும் அணிக்குக் கை கொடுக்க முடியும்.

அஸ்வின்
அஸ்வின் கடந்த 3 வருடமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி வருகிறார். ஸ்பின்னர்களுக்கு ஏற்ற மைதானத்தில் அவர் பிரமிக்க வைக்கும் வகையில் ஆடி வருகிறார். பிட்ச் பொருத்தமானதாக இருந்தாலும் கூட சரியான முறையில் பந்து வீசினால்தான் விக்கெட் கிடைக்கும். அதை அஸ்வின் சரியாகச் செய்கிறார்.

லெவலே வேறு
கஷ்டமான நிலையிலும் கூட சிறப்பாக செயல்படக் கூடியவர் அஸ்வின். சர்வ சாதாரணமா4க 5-6 விக்கெட்களை எடுக்கக் கூடியவர். ஆட்டத்தை வேறு லெவலுக்குக் கொண்டு சென்று விடக் கூடியவர்.

எங்களது துருப்புச் சீட்டு
அஸ்வின்தான் எங்களது முக்கியப் பந்து வீச்சாளர். துருப்புச் சீட்டு. இவர் போன்ற பவுலர் அணியில் இருப்பது எப்போதுமே கேப்டனுக்கு சந்தோஷம் தரும் விஷயமாகும். இலங்கையில் அவர் பவுலிங் செய்த விதமே அதற்கு நல்ல சான்றாகும் என்றார் கோஹ்லி.


Click it and Unblock the Notifications











