
ரன் குவிப்பு
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது 600 ரன்கள் குவித்தது. தவானும், புஜாராவும், அபாரமாக சதம் விளாசினர். கடைசி நேரத்தில் ஹர்திக்பாண்டியா அதிரடி காட்டி அரை சதம் விளாசினார்.

அதிரடி
இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 49 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். அதேபோல், முகமது ஷமியும் 3 சிக்சர்களுடன் 30 ரன்கள் திரட்ட, இந்திய அணி 600 ரன்களை எட்டியது. இலங்கைத் தரப்பில் பிரதீப் 6 விக்கெட்டுகளையும், குமாரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இலங்கை தடுமாற்றம்
தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியில், தொடக்க வீரர் கருனரத்னேவை 2 ரன்னில் உமேஷ் யாதவ் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாக்கினார். அதைத் தொடர்ந்து குனத்திலகா மற்றும் குஷால் மெண்டிசை அடுத்தடுத்து ஷமி வெளியேற்றினார். நல்ல தொடக்கம் கண்ட உபுல் தரங்கா 64 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

ஃபாலோ ஆன்
இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து தடுமாறிவருகிறது. மேத்யூஸ் 54 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஃபாலோ ஆன் தவிர்க்க இன்னும் அந்த அணிக்கு 247 ரன்கள் தேவை.


Click it and Unblock the Notifications











