டெல்லி: மகேந்திர சிங் தோனியை கேப்டன் கூல் என்று ஏன் அழைக்கிறார்கள் என்பது தெரியாதவரா நீங்கள். இதோ உங்களுக்காகத்தான் இந்த வீடியோ. ஒரு திருமணத்தின்போது, பாத்ரூமில் பாடகர் ஒருவர் இதே கேள்வியை கேட்க, அவருக்கு தோனி அளித்த பதில்தான் கூல்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கேப்டன் கூல் என்று அழைக்கப்படுகிறார். மைதானத்தில் எந்த நிலையிலும் பதற்றமடையாமல், மிகவும் நிதானமாக செயல்படுவதே அதற்கு முக்கிய காரணம்.

தோனிக்கு ஃபார்ம் போச்சு, வயசாகிவிட்டது, அவர் ஓய்வு பெற போகிறார், உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகம் என, கடந்த சில வாரங்களாக தோனி குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.
ஆனால் இதையெல்லாம் தலைக்கு எடுத்து செல்லாத தல, எப்போதும் கூலாகவே இருக்கிறார். பிரபல அரசியல் தலைவரும், கால்பந்து கூட்டமைப்பின் தலைவருமான பிரபல படேலின் மகள் பூர்ணிமாவின் திருமணம் மும்பையில் சமீபத்தில் நடந்தது.
அப்போது, பாத்ரூம் சென்ற தோனியிடம் பேட்டி எடுத்தார், இளம் பாடகர் ராகுல் வைத்யா. அப்போது இந்த இடம் கூலாக இருக்கிறது. அது கேப்டன் கூலான நீங்கள் இருப்பதால்தானே என்று ராகுல் கேட்கிறார்.
அதற்கு தெரியாது என்று பதிலளித்த தோனி, பின்னர் மிகவும் கூலாக, நிறைய பாத்ரூம் எக்ஸ்பர்ட்ஸ் இருப்பதால்தான், இந்த இடம் கூலாக உள்ளது என்று கூறினார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
How can someone be so calm and humble all the time 🙌🏻 So much to learn from him 🙏🏻🙏🏻🤗
A post shared by 🎤Rahul Vaidya 🇮🇳 (@rahulvaidyarkv) on