டெல்லி: ஐ.பி.எல். பிக்ஸின் தொடர்பாக விசாரணை நடத்திய முத்கல் கமிட்டியின் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணி பொய்யான வாக்குமூலம் கொடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல். பிக்ஸிங் தொடர்பான முத்கல் கமிட்டி அறிக்கை மீது உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கறிறிஞர் ஹரீஷ் சால்வே, முத்கல் கமிட்டி அறிக்கையானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், பெட்டிங்கில் ஈடுபட்டார் என்பதை விவரிக்கிறது. ஆனால் முத்கல் கமிட்டியிடம் வாக்குமூலம் கொடுத்த கேப்டன் டோணியா, ஜாலிக்காகத்தான் பெட்டிங் கட்டினார் என்று முத்கல் கமிட்டியிடம் பொய்யான வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் என்றார்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில் முத்கல் கமிட்டியிடம் டோணி அப்படி ஒரு வாக்குமூலமே தரவில்லை என்றும் ஹரீஷ் சால்வேதான் தவறான தகவலைத் தருகிறார். இதனால் ஊடகங்களும் டோணி பொய்யான வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளியிட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.