தோனி அவகாசம்
அவர் எப்போது ஓய்வை அறிவிக்க போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பை டி 20 அணிக்கான சிறந்த இந்திய அணியை தயார் செய்ய தோனி அணி தேர்வுக் குழுக்கு அவகாசம் அளித்துள்ளார் என்று பிசிசிஐ கூறியிருக்கிறது.
உறுதி செய்ய வேண்டும்
பிசிசிஐ தரப்பு மேலும் தெரிவித்து இருப்பதாவது: அந்த அவகாசத்துக்குள் இந்திய சிறந்த அணியை தேர்ந்தெடுத்துவிட்டால், ஓய்வை அவர் அறிவிப்பார். அதாவது, இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளதையும் அணியில் போதிய பலம் இருப்பதையும் உறுதி செய்து விட்டால், ஓய்வு குறித்து முடிவெடுப்பதாக தோனி கூறியுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
2 மாத ஓய்வு
அவரை புறக்கணிக்கவே இல்லை. எதிர்கால அணியை தயார் செய்ய தோனி எங்களுக்கு அவகாசம் அளித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னால் அவர் 2 மாத கால ஓய்வு எடுத்துக் கொண்டார். அது இன்னமும் முடியவில்லை.
பெஸ்ட் பினிஷர்
தோனியிடம் நாங்கள் இன்னும் அவரது எதிர்காலம் பற்றி பேசவில்லை. அதனால் தான் எதிர் கால அணி, திட்டம் போன்ற விஷயங்களில் கால அவகாசம் அளித்து உள்ளார். தோனியை போன்ற ஒரு பினிஷர் அணியில் யாரும் இல்லை என்று பிசிசிஐ கூறியிருக்கிறது.