டோணியின் இதயம்
டோணி 2009 ஆம் ஆண்டு டிவிட்டரில் இணைந்தார். அதன் பின் கடைசியாக 2014ல் ஒரு டிவிட்டிற்கு ஹார்ட் சிம்பிள் போட்டு இருந்தார். தற்போது மூன்று வருடம் பின்பு ஒரு டிவிட்டை லைக் செய்து உள்ளார். 'இன்கேப்பார்' என்ற இந்தி பத்திரிக்கை போட்டு இருக்கும் இந்த டிவிட்டில் ''உறுதியானது: விராட் கோஹ்லி தலைமையிலான 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெற்றிபெறும். மேட்ச் பிக்ஸ் ஆகிவிட்டது.'' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2019ல் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடக்க உள்ளது.
செய்தது ஏன்
இந்த டிவிட்டை டோணி லைக் செய்யும் அளவிற்கு இதில் பெரிய விஷயம் எதுவும் இல்லை. மேலும் அதில் மேட்ச் பிக்சிங் என்ற வார்த்தை வேறு இருக்கிறது. இதையடுத்து டோணி ஏன் அப்படி செய்தார் என்று பலரும் கேட்டு வருகிறார்கள். ''நீங்கள் இந்த டிவிட்டை லைக் செய்துள்ளீர்களா? அதில் இருக்கும் மேட்ச் பிக்சிங் என்ற வார்த்தையை கவனிக்கவில்லையா'' என்று கேட்டு இருக்கிறார்.
எந்த தவறும் இல்லை
டோணி செய்ததில் எந்த தவறும் இல்லை என்று சிலர் கூறியுள்ளார். இவர் '' டோணி செய்ததில் எந்த தவறும் இல்லை. அவர் இந்தியா வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கிறார். அதனால் லைக் செய்து இருக்கிறார்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

மற்ற டிவிட்கள்
இதற்கு முன்பு 2013 மற்றும் 2014ல் இரண்டு டிவிட்களை டோணி லைக் செய்து இருக்கிறார். 2013ல் ராஜ்தீப் சர்தேசியின் அண்டர் 19 கிரிக்கெட் குறித்த பதிவை லைக் செய்தார். 2014ல் பிசிசிஐ ரஞ்சி கோப்பை குறித்து வெளிட்டு இருந்த ஸ்கோர் டிவிட்டை லைக் செய்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications