ஷமி அபாரம்
இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷமி, 42 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் இந்திய அணி விறுவிறுவென ரன்களைக் குவிக்க தொடங்கியது. 4.1 ஓவரில் 27 ரன்களை எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.
வானிலை நம்ம கன்ட்ரோல் இல்லை..
நேற்றைய போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் டோணி, வானிலை என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லை. அதன் முடிவை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
ஷமிக்கு புகழாரம்
20 ஓவர் போட்டி போல நாங்கள் நினைக்கவில்லை. ஷமியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. நன்றாக பந்து வீசி விக்கெட்டுகளையும் ஷமி கைப்பற்றினார் என்றார்.
கட்டாக்கில் கலக்குவோம்
ஆஸ்திரேலிய அணி கேப்டன் பெய்லி கூறுகையில், நேற்றைய ஆட்டம் நன்றாகத்தான் இருந்தது. கட்டாக் போட்டியிலும் நன்றாக விளையாடி நிச்சயம் வெல்வோம் என்றார்.