
ஆனந்தக் கண்ணீர்
உலகக் கோப்பையை இந்தியா இரண்டாவது முறையாக வென்றபோது, டோணிக்கு அதுதான் முதல் கோப்பை. ஆனாலும், மூத்த வீரரான சச்சின் டெண்டுல்கரிடம் அதை கொடுத்து, அவருடைய கண்ணில் இருந்து வழிந்த ஆனந்த கண்ணீிரைப் பார்த்து நெகிழ்ந்தவர் டோணி.

100 ஸ்டம்பிங்
இலங்கை அணிக்கு எதிரான தொடரில், விக்கெட் கீப்பராக 100 ஸ்டம்பிங் செய்த முதல் வீரர் என்ற சாதனையை நேற்று நிகழ்த்தினார் டோணி.
ஆனால் அதற்காக தலைகனம் பிடித்து ஆடாமல், தல டோணி, வீரர்களுடன் மைதானத்தில் ஜாலி ரவுண்ட் வந்து, தான் சிறந்த கேப்டனாக கொண்டாடப்படுவதற்கான காரணத்தை உணர்த்தினார்.

காரில் ரவுண்டு
இலங்கைக்கு எதிரான தொடர் வெற்றிக்கு பிறகு, தொடர் நாயகன் விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்பட்டது. அதற்காக, பும்ராவுக்கு வழங்கப்பட்ட காரில், அணியின் இளம் வீரர்களை அழைத்துக் கொண்டு, மைதானத்தை வலம் வந்தார் டோணி.

கொண்டாட்டம்
இதை கொண்டாட்டமாக பார்த்தாலும், டோணியின் மிகப் பெரிய வெற்றிப் பயணத்தின் ஒரு அத்தியாயமாகவும் பார்க்கலாம். தற்போதைக்கு அணியில், வயதில் மூத்தவரான டோணி, இளம் வீரர்களுடன் சகஜமாக பழகியது, `நான் என்றால் உதடுகள் ஒட்டாது, நாம் என்றால்தான் உதடுகள் ஒட்டும்' என்பதை உணர்த்தியுள்ளார்.
2019 உலகக் கோப்பை போட்டிக்கு அணியை தேர்வு செய்வோர், இதை கொஞ்சம் கவனத்தில் வைத்திருப்பார்கள் என்று நம்புவோம்.


Click it and Unblock the Notifications