
இப்போது என்ன
இந்த நிலையில்தான் தோனி பாஜகவில் சேர போகிறார் என்று சில நாட்களுக்கு முன் செய்திகள் வந்தது. தோனி வந்தால் கண்டிப்பாக கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று பாஜகவை சேர்ந்த சில உறுப்பினர்களும் பேட்டி அளித்து இருந்தனர். தோனி ஓய்விற்கு பின் பாஜகவில் இணைவார் என்று வரிசையாக நிறைய கணிப்புகளும் வெளியானது.

ஆனால் இல்லை
ஆனால் எப்போதும் போல, மைதானத்தில் அமைதியாக இருப்பது போலவே தோனி இதற்கும் அமைதியாக இருந்தார். அரசியல் திட்டங்கள் குறித்து தோனி எதுவுமே தெரிவிக்கவில்லை. பாஜகவினர் தெரிவித்த கருத்துக்கும் தோனி எந்த விதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை.
புகைப்படம்
இந்த நிலையில்தான் தற்போது தோனியின் புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு பின் வெளியான தோனியின் முதல் புகைப்படம் இதுவாகும். இதில் தோனி காவி நிறத்தில் டீ சர்ட் அணிந்து இருக்கிறார். முதல் முறை அவர் இப்படி காவி நிறத்தில் முழுக்க டீ சர்ட் அணிந்து உள்ளார்.

பலர் கேள்வி
இதனால் தோனியின் ரசிகர்கள் பலர், அவர் ஏன் இப்போது இந்த டீ சர்ட்டை போட்டு புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். இதில் என்ன உள்குத்து உள்ளது. கண்டிப்பாக தோனிக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது. அதை அவர் மறைமுகமாக டீ சர்ட் மூலம் வெளிப்படுத்துகிறார் என்று கூறி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











