ஜெய்ப்பூர்: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வென்றாலும் கூட கடைசி நேரத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியது குறித்து கேப்டன் டோணி கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆட்டத்திற்குப் பின்னர் டோணி செய்தியாளர்களிடம் பேசுகையில், கடைசி ஓவர்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனிவரும் ஆட்டங்களிலாவது பந்து வீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீச வேண்டும்.எனினும் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்து வீசியது பாராட்டுக்குரியது. ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினாலும் அவர்கள் அதிக ரன்களை குவித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.தென்னாப்பிரிக்கா அணி இந்த தோல்வியிலிருந்து மீண்டு வரும் திறன் பெற்றது. அதனை சமாளிக்க இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்றார்.