டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள நிர்வாகக் குழு எடுத்துள்ள புதிய முடிவால், கேப்டன் கூல் டோணிக்கு மற்றவர்களைவிட குறைந்த சம்பளமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகத்தை கவனித்து வரும் சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள நிர்வாகக் குழுவுடன், கடந்த நவம்பர் மாதம் கோச் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோஹ்லி, டோணி ஆகியோர் பேசினர்.
