
பல்வேறு விஷயங்கள்
இந்நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு தேர்வுக் குழுவின் தலைவர் எம் எஸ் கே பிரசாத் பல்வேறு விஷயங்களை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். உலக கோப்பை தோல்வி, கோலியின் செயல்பாடு, 4வது இடம், தோனியின் ஓய்வு என பல விஷயங்களை கூறி இருக்கிறார்.

தோனி ஜாம்பவான்
அவர் கூறியதாவது : தோனி ஓய்வு குறித்து இனியும் பேச எதுவும் இல்லை. இந்திய அணிக்காக 2 உலக கோப்பையை பெற்று கொடுத்தவர். அவர் ஒரு ஜாம்பவான் இது போன்ற மிகச் சிறந்த வீரருக்கு எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று அவர்களுக்கே தெரியும்.

இளம் வீரர் ரிஷப் பண்ட்
அவரின் ஓய்வு அவர் கையில்தான் உள்ளது எங்களிடம் எந்த முடிவும் கிடையாது. அதில் பிசிசிஐ தலையிடாது. அதேசமயம் இந்திய அணியின் வருங்காலத்தை கணக்கில் கொண்டு இளம் வீரரான ரிஷப் பண்ட்டுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படும். இனி தோனிக்கு முக்கியத்துவம் இல்லை.

விக்கெட் கீப்பர் பொறுப்பு
எனவே தோனிக்கு பதிலாக ரிஷப் பண்டுக்கு விக்கெட் கீப்பர் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது. டெஸ்ட் அணியில், சாஹா கூடுதல் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று தமிழ்நாடு சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார் என்றார்.


Click it and Unblock the Notifications











