டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இலங்கையின் தில்ஷன் ஓய்வு பெற முடிவு!
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்ஷன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக நாளை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்க இருக்கிறார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 ஆண்டுகாலமாக அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

மொத்தம் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தில்ஷன், 40.98 என்ற சராசரியில் 5492 ரன்களை எடுத்துள்ளார். மொத்தம் 16 சதங்கள், 23 அரை சதங்களையும் தில்ஷன் எடுத்திருக்கிறார். மேலும் 39 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.
இலங்கை அணி தனது அடுத்த டெஸ்ட் தொடராக பாகிஸ்தான் அணியுடன் டிசம்பரில் விளையாட இருக்கிற நிலையில் தில்ஷான் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
Story first published: Wednesday, October 9, 2013, 17:39 [IST]
Other articles published on Oct 9, 2013


Click it and Unblock the Notifications