திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசனில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தான் விளையாடிய 5 ஆட்டங்களில் 4ல் வென்று புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நேற்று நடந்த ஆட்டத்தில் ஜோன்ஸ் டூடி பாட்ரியாட்ஸ் அணியை அபாரமாக வென்றது.
டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜோன்ஸ் டூடி பாட்ரியாட்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின.
முதலில் விளையாடிய தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. எஸ். தினேஷ் நல்ல துவக்கத்தை கொடுத்தாலும், கவுசிக் காந்தி 6, ஆகாஷ் சும்ரா 4, ஆனந்த் சுப்ரமணியம் 13, அக்ஷய் ஸ்ரீனிவாசன் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
தமிழ்நாடு பிரிமியர் லீக் முகப்பு | அட்டவணை/முடிவுகள்
தினேஷ் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஆர். சதீஷ், மாலோலன் ரங்கராஜன் ஜோடி சேர்ந்தனர். சதீஷ் 41 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 74 ரன்கள் சேர்த்தார். மாலோலன் 24 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்சருடன் 37 ரன்கள் சேர்த்தார். தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது. திண்டுக்கல் அணியின் அபினவ் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய திண்டுக்கல் அணிக்கு என்,. ஜெகதீசன் 31 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஹரி நிஷாந்த் 4, சதுர்வேத் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆர். விவேக் 32 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 62 ரன்கள் விளாசினார். மொகம்மது 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இறுதியில் 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து திண்டுக்கல் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த சீசனில் திண்டுக்கல் அணி தான் விளையாடிய 5 ஆட்டங்களில் 4ல் வென்று, 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.