திண்டுக்கல் : டிஎன்பில் கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிபையர் போட்டியில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி சியச்செம் மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசன் நடக்கிறது. இதில் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் துவங்குவதாக இருந்தது.திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால், கடந்த இரண்டு நாட்களில் நடக்க வேண்டிய டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டன.
