
டாப் ஆர்டர்
அதில் தொடக்க வீரராக கே எல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோரை தினேஷ் கார்த்திக் தேர்வு செய்து இருக்கிறார். இதைப் போன்று நடுவரிசையில் புஜாரா, விராட் கோலி ஆகியோரை தேர்வு செய்துள்ள தினேஷ் கார்த்திக் ஸ்ரேயாஸ் ஐயர், பதில் சூரியகுமார் யாதவை தினேஷ் கார்த்திக் விளையாட வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பந்துவீச்சாளர்கள்
இதேபோன்று விக்கெட் கீப்பராக கே எஸ் பரத்தை குறிப்பிட்டுள்ள கார்த்திக் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களாக ஜடேஜா அஸ்வின், அக்சர் பட்டேல் ஆகியோரை தேர்வு செய்து இருக்கிறார். இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களாக முகமதுசமியும், முகமது சிராஜும் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

ஏன் வேண்டாம்
கிட்டத்தட்ட இப்படி ஒரு அணி நாளை களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட் தவிர தன்னுடைய திறமையை ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் நிரூபிக்கவில்லை. இதனால் நடு வரிசையில் தற்போது சிறந்த பார்மில் இருக்கும் சுப்மன் கில் தான் விளையாட வைக்க வேண்டும்.

அடுத்த கோலி
ஒரு நாள் போட்டிகளில் சிறந்து விளையாடுகிறார் என்பதற்காக டி20 யில் சுப்மன் கில்லுக்கு இந்திய நிர்வாகம் வாய்ப்பு வழங்கியது. ஆனால் விராட் கோலி போன்று ஒரு வீரரை நீங்கள் உருவாக்க வேண்டும் என்றால் நீங்கள் சுப்மன் கில்லுக்கு தான் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











