Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது வரலைனா விட்ருங்க.. ஏன் போராட்டம்.. புஜாராவின் கம்பேக்.. தினேஷ் கார்த்திக் முக்கிய கருத்து!

சட்டோகிராம்: வங்கதேச தொடரில் கம்பேக் கொடுத்துள்ள சட்டீஸ்வர் புஜாரா, ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது குறித்து தினேஷ் கார்த்திக் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் ஆதிக்கம் தான் தொடக்கத்தில் இருந்தே உள்ளது.

இந்த போட்டியில் இந்தியாவின் ஆட்டத்தை பார்த்து கொண்டாடியதை விட, சீனியர் வீரர் சட்டீஸ்வர் புஜாராவின் பேட்டிங்கை பார்த்து தான் ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வங்கதேச டெஸ்ட்

வங்கதேச டெஸ்ட்

முதல் இன்னிங்ஸில் டாப் ஆர்டர் வீரர்கள் ஏமாற்றிய போதும், தூண் போல நின்ற புஜாரா, 90 ரன்களை அடித்திருந்தார். இதே வேகத்துடன் 2வது இன்னிங்ஸில் ஆடி 102 ரன்களை அடித்து அசத்தினார். கடைசியாக 2019ம் ஆண்டு சதமடித்த அவர், 3 வருடங்களுக்கு பின்னர் தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளா. இதன் மூலம் அணியில் அவருக்கான இடத்தை உறுதி செய்துக்கொண்டார்.

அதிவேக சதம்

அதிவேக சதம்

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் வெறும் 130 பந்துகளில் தனது 19வது சதத்தை பூர்த்தி செய்தார். புஜாரா தனது டெஸ்ட் பயணத்தில் அடித்த அதிவேக சதம் இதுவாகும். இதில் 13 பவுண்டரிகள் அடங்கும். இப்படி அதிரடி பாதைக்கு திரும்பியுள்ள சூழலில், ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யாமல் விட்டுள்ளார்.

 தினேஷ் கார்த்திக் கருத்து

தினேஷ் கார்த்திக் கருத்து

இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். எனக்கு தெரிந்தவரை புஜாராவுக்கு ஐபிஎல்-ல் ஆட விருப்பம் இல்லை என நினைக்கிறேன். இத்தனை காலம் போராடி மிகவும் சோர்ந்துவிட்டார். தற்போது தான் ஐபிஎல் அவருக்கான களம் இல்லை என்பதை புரிந்துக்கொண்டுள்ளார். அது பாராட்டுக்குரியது.

நிரூபிக்க அவசியம் இல்லை

நிரூபிக்க அவசியம் இல்லை

கோடைக்காலத்தில் இங்கிலாந்தில் நிறைய கிரிக்கெட்டை புஜாரா ஆடியுள்ளார். புஜாரா எதையும் நிரூபிக்க வேண்டிய நேரம் இது இல்லை. எங்கு விளையாடினால் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்குமோ அங்கு தான் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் ஐபிஎல் தனக்கான இடம் இல்லை என புஜாரா புரிந்துக்கொண்டார்.

புது கண்ணோட்டம்

புது கண்ணோட்டம்

ஒரு கிரிக்கெட்டராக இருந்து சூழல்களை சிந்தித்து பார்க்க வேண்டும். அதாவது நம்மால் ஒரு போரில் வெற்றி பெற முடியாது என தெரிந்துவிட்டால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதில் இருந்து விலகிவிட வேண்டும். எதில் ஜொலிக்க முடியுமோ அதில் தான் போராட வேண்டும். புஜாராவை இனி அந்த கண்ணோட்டத்தில் நாம் பார்ப்போம் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

Story first published: Saturday, December 17, 2022, 10:27 [IST]
Other articles published on Dec 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+