
நேரடி போட்டி
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் தொடர்ந்து ஒரே நேரத்தில் நடைபெற்றதே அதற்கு காரணம். ஷிகர் தவான், ரிஷப் பண்ட், கே எல் ராகுல் ,பும்ரா கேப்டனாக சில காலம் இருந்தார்கள். ஆனால் தற்போது ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மட்டும்தான் கேப்டன் பொறுப்புக்கு நேரடி போட்டியில் இருக்கிறார்கள்.

எதிர்கால கேப்டன்
கே எல் ராகுல் கேப்டனாக இருந்து டெஸ்ட் போட்டியில் வென்றாலும், அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பேட்டிங்கிலும் அவருடைய ஃபார்ம் பாதிக்கப்பட்டது . ஆனால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக ஐபிஎல் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஐபிஎல் போன்ற தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று தந்திருக்கிறார். இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு தான் எதிர்காலத்தில் கேப்டன் ஆக வாய்ப்பு இருக்கிறது.

பெரும் சவால்
இப்போது உள்ள சூழ்நிலையில் ராகுல் கேப்டன் பந்தயத்தில் போட்டி போட வாய்ப்பில்லை.
அடுத்த 12 மாதத்தில் ரோகித் ,ஹர்திக் பாண்டியா கூட்டணி தான் இந்திய அணியை வழி நடத்த வாய்ப்பு இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் தற்போது இவர்கள்தான் மிகப்பெரிய வீரர்களாக இருக்கிறார்கள் என்று தினேஷ் கார்த்திக் கூறினார். ரோகித் சர்மாவை பொருத்தவரை 2023 ஆம் ஆண்டு உலககோப்பை, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பெரும் சவாலாக இருக்கும்.

இளம் வீரருக்கும் வாய்ப்பு
அதில் ஒரு வேளை ரோகித் சர்மா சொதப்பி விட்டால், வெள்ளை நிற பந்துக்கு முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் ஹர்திக் ஆல் ரவுண்டர் என்பதால் காயம் அடைய வாய்ப்பு உள்ளது. இதனால் சுப்மான் கில் போன்ற இளம் வீரர்களையும் கேப்டன் பொறுப்புக்கு தயார்படுத்துவது அவசியம்.


Click it and Unblock the Notifications











