
இரட்டை சதம் விளாசல்
இந்த போட்டியில் இளம் வீரர் இஷான் கிஷான் ஆடிய ருத்ரதாண்டவம் கிரிக்கெட் ரசிகர்களை வாயைப் பிளக்கவைத்துள்ளது. தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய அவர் 131 பந்துகளில் 210 ரன்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதே போல இரட்டை சதம் அடித்த 4வது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

தினேஷ் கார்த்திக்கின் பேச்சு
இந்நிலையில் இஷான் கிஷானின் ஆட்டம் குறித்து சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், முதல் 5 ஓவர்களுக்கு பின்னர் இஷான் கிஷான் தனது இன்னிங்ஸை வேகப்படுத்திய விதம் மிகவும் அழகாக இருந்தது. அவரின் ஷாட்களும், பவுலர்களை தொடர்ச்சியாக அடித்துக்கொண்டே இருந்த விதமும் அவ்வளவு சிறப்பாக இருந்தது.

தரமான ஸ்ட்ரைக் ரேட்
இஷான் கிஷானின் இரட்டை சதத்தின் சிறப்பம்சமே ஸ்ட்ரைக் ரேட் தான். 160 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரட்டை சதத்தை அவர் பூர்த்தி செய்தார். அவரின் 2வது சதம் வெறும் 41 பந்துகளில் வந்தவை. இதனால் தான் அவரை அவ்வளவு பெரிய தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது. சிறப்பான முடிவுகளை தரக்கூடிய வீரராக இஷான் கிஷான் உருவெடுத்துள்ளார்.

தினேஷின் எச்சரிக்கை
தற்போதைய நிலையை வைத்து பார்த்தால் நிறைய புறாக்களுக்கு மத்தியில் ஒரு பெரிய பூணை உள்ளது போன்று இருக்கிறார். குறிப்பாக ஓப்பனிங் இடத்திற்கு இதனை கூறுகிறேன் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அதாவது ஓப்பனிங் இடத்திற்கு கே.எல்.ராகுல், சுப்மன் கில், ஷிகர் தவான், சஞ்சு சாம்சன் என பல வீரர்கள் போட்டிப்போட்டு வருகின்றனர். ஆனால் அவர்களையெல்லாம் முந்தி இஷான் முதன்மை தேர்வாக நின்றுள்ளார் என தினேஷ் கார்த்திக் எச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











