சாம்பியன் கனவு
அடுத்து வரக்கூடிய போட்டிகளில் வென்றாலும்... பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட ஐபிஎல் சாம்பியன் கனவு தகர்க்கப்பட்டு விட்டது என்றே சொல்லலாம்.
கடும் விமர்சனம்
தொடர் தோல்வியால்... கோலியின் கேப்டன்சி மீதும் முன் எப்போதும் இல்லாத விமர்சனங்கள் வந்து விழுந்துள்ளன. அப்பரண்டிஸ் கேப்டன் என்ற பெயரும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
கோலி மீது அதிருப்தி
இந் நிலையில் கோலியின் மீதான தொடர் விமர்சனங்களால் அதிருப்தியடைந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனான திலிப் வெங்சர்க்கார் கோபம் அடைந்துள்ளார். ஐபிஎல் தொடரை வைத்து எந்த ஒரு வீரரையும் எடை போடக்கூடாது என்று அவர் கூறியிருக்கிறார்.
தலைசிறந்தவர்
அவர் மேலும் கூறியதாவது: விராட் கோலி... அருமையான பார்மில் இருக்கிறார். கேப்டனாக, தலைசிறந்த வீரர்களில் அவரும் ஒருவர். அவர் மீது நம்பிக்கை வையுங்கள்.
பந்துவீச்சு அபாரம்
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடியவர். உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் நுழையும் அணிகளில் இந்தியாவும் ஒன்று. அணியின் பந்துவீச்சு அருமையாக இருக்கிறது.
கவலை வேண்டாம்
கடைசி 10 ஓவர்களை எதிர்கொள்ளும் போது இந்தியா தடுமாறி தோல்வியை சந்திக்கிறது. தற்போது பும்ரா மற்றும் பலர் இருப்பதால் அதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
பொறுப்பு வேண்டும்
கோலி, ரோகித் அருமையான பார்மில் இருக்கின்றனர். ஆனால்.. எல்லா நேரங்களிலும் இந்த 2 பேட்ஸ்மென்களை நம்பி இருக்க முடியாது. மற்றவர்களும் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்.
எடை போடுவது தவறு
4ம் வரிசையில் யாரை இறக்குவது என்பதில் பல யோசனைகள் இருக்கின்றன. ராகுல், ரகானே இதற்கு பொருத்தமானவர்கள். அவர்களை போன்றே மயங்க் அகர்வாலும் இருக்கிறார். யாராக இருந்தாலும் ஐபிஎல் போட்டிகளை வைத்து எடை போடுவது தவறு.