பும்ராவுக்கு சோதனை
இந்நிலையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை மேற் கொள்ளப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சியில், பும்ரா நேற்று ஈடுபட்டிருந்த போது, அவரை மட்டும் ஊக்கமருந்து தடுப்பு பிரிவினர் அழைத்துச் சென்றனர்.
2 கட்டங்களாக சோதனை
அதை மைதான அதிகாரிகள் உறுதி செய்திருக்கின்றனர். மொத்தம் 2 கட்டங்களாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. முதலில், சிறுநீர் சோத னையும், 45 நிமிடங்கள் கழித்து ரத்த பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை முடிவு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
உறுதி செய்த பிசிசிஐ
வேறு எந்த வீரருக்கும் ஊக்கமருந்து சோதனை நடத்தப் பட்டதா என்ற விவரமும் வெளியிடப் படவில்லை. அதே நேரத்தில் இந்த ஊக்க மருந்து சோதனையை, இந்திய கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது. இங்கிலாந்தில் நிலவும் தெளிவற்ற வானிலையால், பந்து வீச்சு வியூகத்தை வகுப்பதில் இந்திய அணி நிர்வாகம் திணறி வருகிறது.
இந்தியா அதிர்ச்சி
நாளை உலக கோப்பை தொடரில் தமது முதல் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் பும்ராவுக்கு ஊக்கமருந்து பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.