போதையில் கார் ஓட்டிய கிரிக்கெட் வீரருக்கு என்ன தண்டனை தெரியுமா?
வெளிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டாக் ப்ராஸ்வெல் மது அருந்திவிட்டு கார் ஓட்டி அந்நாட்டு போலீஸிடம் சிக்கி வினோத தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டாக் ப்ராஸ்வெல். 26 வயதான இவர் 14 ஒரு நாள் போட்டியிலும், 14 டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் டாக் ப்ராஸ்வெனல், மூன்றாவது முறையாக மது அருந்திவிட்டு கார் ஓட்டி அந்நாட்டு போலீசாரிடம் மாட்டிக்கொண்டார்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அவரது ரத்தத்தில் இருமடங்கு ஆல்கஹால் இருந்ததாக பரிசோதனையில் தெரியவந்ததையடுத்து, 100 மணி நேரம் மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என அந்நாட்டு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்குள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி மூன்று முறை வழக்குப்பதிவு செய்யப்படுமானால் நியூசிலாந்து நாட்டு வழக்கப்படி தண்டனை வழங்கப்படும். டாக் ப்ராஸ்வெனல், ஏற்கெனவே 2008 மற்றும் 2010 ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு கார் ஓட்டியதாக புகார் உள்ளது. இது குறித்து டாக் ப்ராஸ்வெல் தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications