
வீணான வாய்ப்புகள்
போட்டிக்கான இளமை இருந்தும், போதிய அனுபவம் இல்லாததால் பலமுறை கொடுத்த வாய்ப்புகளை வீணடித்து வருகிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்து உள்ளன. எனவே, அவருக்கு பதிலாக மாற்று வீரரை கொண்டு வருமாறும் கருத்துகள் முன் வைக்கப்பட்டன.

சாஹா சரியானவர்
இந்நிலையில் 2வது போட்டியில் சாஹா விக்கெட் கீப்பராக பணியாற்ற தகுதியானவர் என்று முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மானி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ரிஷப் பன்ட் இன்னும் தொடக்க நிலையிலேயே இருக்கிறார்.

எளிதான பணியல்ல
அவர் கடவுள் கொடுத்த வரம். ஆனால் கிரிக்கெட்டில் இன்னும் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும். விக்கெட் கீப்பர் பணி என்பது அவ்வளவு எளிதல்ல. மிகவும் கடினமான பணி. கைகளில் கிளவுஸ் அணிந்தவர் எல்லாம் கீப்பராக பணியாற்றிட முடியாது.

பயன் என்ன?
துரதிருஷ்டவசமாக சாஹா காயம் அடைந்தார். ஆகையால், ஓராண்டுக்கு மேல் விளையாட முடியாத நிலை உருவானது. அவருக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும். நீங்கள் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றால், அவரை அணியில் வைத்திருப்பதின் பயன் என்ன? என்றார்.


Click it and Unblock the Notifications











