ஜோகன்னஸ்பர்க்: இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், தென் ஆப்ரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது.அதன்படி, இலங்கை அணியின் நிரோஷன் டிக்வெலா, உபுல், தரங்கா ஆகியோர் களமிறங்கினர்.
தென்ஆப்ரிக்காவின் பந்துவீச்சில் சிக்கிய இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை அணியின் குசால் மெண்டிஸ் 60 ரன்னும், ஒஷாடா பெர்னாண்டோ 49 ரன்னும் எடுத்தனர்.