Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துலீப் கோப்பை 2026: பைனலில் இருந்து ஸ்டார் வீரர் விலகல்.. சென்னை ரசிகர்கள் சோகம்

சென்னை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ராகுல், துலீப் கோப்பை 2026 இறுதிப் போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராகுல், தெற்கு மண்டல அணிக்காக விளையாட வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது.

இருப்பினும், சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் கிழக்கு மண்டல அணிக்கு எதிரான இறுதிப் போட்டி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, ராகுல் இப்போட்டியில் பங்கேற்க மாட்டார் என்பதை தெற்கு மண்டல அணியின் கேப்டன் திலக் வர்மா உறுதிப்படுத்தியுள்ளார். இது சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

KL Rahul

போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திலக் வர்மா, ராகுல் இப்போட்டிக்காக சென்னைக்கு இன்னும் வந்து சேரவில்லை என்றும், அதனால் அவர் இறுதிப் போட்டியில் விளையாட மாட்டார் என்றும் தெரிவித்தார்.

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா, பாகிஸ்தான் போட்டி எப்போது? எங்கு பார்க்கலாம்? சேனல், நேரலை விவரம்

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா, பாகிஸ்தான் போட்டி எப்போது? எங்கு பார்க்கலாம்? சேனல், நேரலை விவரம்

"கே.எல். பாய் எங்களுடன் இல்லை" என்று திலக் வர்மா கூறினார். ராகுல் இல்லாததால், கடந்த முறை ரன்னர்-அப் பட்டம் வென்ற தெற்கு மண்டல அணிக்கு நாராயண் ஜெகதீசன் மற்றும் ரிக்கி புய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கே.எல். ராகுல் தவிர, தேவ்தத் படிக்கல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரையும் துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டது. இவர்கள் இருவரும் தெற்கு மண்டல அணியின் சார்பில் விளையாட களமிறங்குகின்றனர்.

பிசிசிஐ அகாடமியில் வடக்கு மண்டல அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் விளாசிய கேப்டன் திலக் வர்மா, தேவ்தத் படிக்கல் 3-வது வரிசையில் பேட்டிங் செய்வார் என்பதை உறுதிப்படுத்தினார்.

"தேவ்தத் படிக்கல் அணியில் இணைவது எங்களது பேட்டிங் வரிசையை மேலும் வலுப்படுத்தும். கடந்த இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் அவர் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது, எனவே அவர் அணியில் இருப்பது எங்களுக்கு ஒரு பெரிய பலமாகும்" என்று திலக் வர்மா கூறினார்.

தேர்வுக்குழு செய்தது மிகப் பெரிய தவறு.. அப்படி என்ன உங்களுக்கு பயம்? ஸ்ரீகாந்த் சரமாரி கேள்வி

Also Read

தேர்வுக்குழு செய்தது மிகப் பெரிய தவறு.. அப்படி என்ன உங்களுக்கு பயம்? ஸ்ரீகாந்த் சரமாரி கேள்வி

படிக்கல் சமீபகாலமாக மிகச் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய அவர் இரண்டு சதங்களை விளாசியிருந்தார். அதற்கு முன்னதாக கொழும்பில் நடந்த இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் அவர் சதம் அடித்திருந்தார்.

Story first published: Saturday, September 5, 2026, 16:30 [IST]
Other articles published on Sep 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+