
தோனி ஸ்டைல்
தோனி எப்போதுமே அவரை நம்புவார். அனைத்துமே எந்த சூழ்நிலையிலும் சாத்தியம் என்று தோனி இருப்பார். மூன்று பந்துக்கு 18 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் பந்துவீச்சாளர்களாக நீங்கள் தோற்கலாம். ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு அப்போதும் வாய்ப்பு இருக்கும் என நம்புபவர் தான் தோனி. அதற்காக பதற்றம் அடையவும் மாட்டார். அனைத்தையும் அவர் தலையில் சுமத்தி கொள்ள மாட்டார்.

புரிய வைத்தார்
தோனியிடம் இருந்து நான் கற்று கொண்ட அம்சமே களத்தில் அவர் எப்படி அமைதியாக செயல்படுகிறார் என்பதை தான். அவர் மீது இருக்கும் அழுத்தத்தை பந்துவீச்சாளர்களுக்கு மாற்றிவிடுவார் தோனி. இறுதிக் கட்டத்தில் பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்களுக்கு தான் நெருக்கடியும், அழுத்தமும் அதிகம் என்று தோனி எனக்கு புரிய வைத்துள்ளார்.

சிஎஸ்கே அனுபவம்
இதை தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பின்பற்ற போகிறேன். களத்தில் அமைதியாக நின்று தன்னம்பிக்கையுடன் இருந்தால், போட்டியை எந்த சூழலிலும் வெல்லலாம். சிஎஸ்கே அணியில் விளையாடிய அனுபவம் நிச்சயம் எனக்கு இந்தியாவுக்கு எதிரான தொடரில் கைக் கொடுக்கும். சிஎஸ்கே அணியை பொறுத்தவரை, அது அனுபவமிக்க அணி.

சிஎஸ்கே அடுத்த சீசன்
கிரிக்கெட்டில் எப்போதுமே முடிவு நமக்கு சாதகமாக இருக்காது என்பதை அறிந்த வீரர்கள் உள்ளனர். நடந்து முடிந்த சீசனில் சிஎஸ்கே அணியில் இருந்த நல்ல விஷயங்களை மட்டும் பார்க்க வேண்டும். பலமான எதிர்காலத்தை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்.அடுத்த 3 சீசனுக்கு ஒரு தரமான அணியை உருவாக்கினால், இந்த சீசனில் தோற்றது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.


Click it and Unblock the Notifications











