
சென்னை
சென்னையில் நடக்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஒரு தமிழக வீரர்தான் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஆட போகும் ஸ்பின் பவுலர்கள் யார் என்பது கேள்வியாக உள்ளது. இந்திய அணியில் இரண்டு ஸ்பின் பவுலர்கள் ஆட வேண்டும்.

இந்திய அணி
தற்போது இந்திய அணியில் நான்கு ஸ்பின் பவுலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி குல்தீப் யாதவ், அஸ்வின் , வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேருக்கு ஆடும் அணியில் வாய்ப்பு வழங்கப்படும்.

அஸ்வின்
இந்த நிலையில் இந்திய அணியில் ஒரே நேரத்தில் அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் இருவரும் ஆட வாய்ப்பு இல்லை என்கிறார்கள். ஒரு லெக் ஸ்பின் பவுலர் தேவை என்பதால் கோலி பெரும்பாலும் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுப்பார் என்கிறார்கள். இதனால் அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் இருவரில் ஒருவர் வாய்ப்பை இழக்க நேரிடும் .

இரண்டில் ஒருவர்
அதன்படி அஸ்வின் முதல் போட்டியிலும் வாஷிங்க்டன் சுந்தர் இரண்டாவது போட்டியிலும் ஆட வாய்ப்புள்ளது. அல்லது இரண்டு போட்டியிலும் அஸ்வின் மட்டுமே ஆடுவார் என்று கூறப்படுகிறது. குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று இந்த மாற்றம் செய்யப்படுகிறது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications