நாட்டிங்காம்: இங்கிலாந்து அணிக்கெதிராக இந்திய அணி விளையாடும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணியில் அதிரடி ஆல் ரவுண்டர் சாம் கர்ரனுக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரிஸ்டால் நைட் கிளப் வழக்கில் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்ததால் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியும் அவர் சேர்க்கப்பட்டார்.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியை அறிவித்தார். அப்போது அவர் சாம் கர்ரனுக்கு பதிலாக ஸ்டோக்ஸ் இடம் பெறுவதை உறுதி செய்தார். அப்போது அவர் கூறியதாவது, கேப்டனாக நான் எடுத்த கடினமான முடிவு இது என்றும்,5 போட்டிகளுக்கான அணியை தேர்வு செய்யும் போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்ற சாம் கர்ரன் அணியில் இடம் பெறவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர்,பென் ஸ்டோக்ஸ் அந்த பிரச்சனைகளில் இருந்து முழுவதுமாக வெளியே வந்து விட்டதாகவும் அவர் முழுவதுமாக கிரிக்கெட் போட்டிகளில் கவனத்தை செலுத்த விருப்பதாகவும் தெரிவித்தார்.
இங்கிலாந்து அணி: