
டி20 தொடர்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 2 -2 என சமநிலையில் உள்ளது. 5வது மற்றும் கடைசி போட்டியில் வென்று தொடரை வெல்ல கோலி அணிக்குள் பல்வேறு மாற்றங்களை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணி பந்துவீச்சில் பக்கா சப்போர்ட் தருவதற்காக யார்க்கர் நடராஜன் அகமதாபாத்திற்கு சென்றுள்ளார். இதனை அவர் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அசத்தல்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் வலைப்பந்து வீச்சாளராக சென்ற டி நடராஜன், சில வீரர்கள் காயம் அடைந்ததால், மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமானார். அதில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகக் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட அவர், அனைவரின் கவனத்தையும் பெற்றார். இதனால் அவருக்கு இங்கிலாந்து டி20 தொடரிலும் ஆட வாய்ப்பு வழங்கப்பட்டது.

உடற்தகுதி
எனினும் ஆஸ்திரேலிய தொடரின் போது நடராஜனுக்கு ஏற்பட்ட தோள்பட்டை, முழங்கால் காயத்தால், அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஓய்வில் இருந்தார். இதனால் 4 டி20 போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர், பிசிசிஐயின் யோ யோ டெஸ்டில் தேர்ச்சியடைந்து, சில நாட்களுக்கு முன் அகமதாபாத் சென்றதாகவும், அங்கு தனிமைப்படுத்துதல் காலத்திற்கு பிறகு நேற்று அணியில் இணைந்ததாகவும் பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடராஜனும் இந்திய அணியுடன் இணைந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.

5வது டி20 போட்டி
நடராஜன் தற்போது முழு உடற்தகுதியுடன் இருப்பதால் 5வது டி20-ல் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும் டி.நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே கடைசி டி20 போட்டியில் அவர் இல்லையென்றாலும், ஒரு நாள் தொடரில் கண்டிப்பாக அணியில் பார்க்கலாம் எனக்கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











