
2வது டெஸ்ட்
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி சவுதாம்ப்டன் நகரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

பாகிஸ்தான் முதல் இன்னிங்க்ஸ்
அபித் அலி 60, முகமது ரிஸ்வான் 72, பாபர் ஆசாம் 47 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 236 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்க்ஸில் 300 ரன்களை கூட தாண்டாததால் பாகிஸ்தான் அணி சிக்கலில் இருந்தது.

குறுக்கிட்ட மழை
பாகிஸ்தான் முதல் இன்னிங்க்ஸ் ஆட்டம் நான்காம் நாள் காலையில் தான் முடிவுக்கு வந்தது. முதல் இரண்டு நாட்களில் மொத்தமே 86 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. மூன்றாம் நாள் ஆட்டம் முற்றிலுமாக மழையால் கைவிடப்பட்டது.

டிரா ஆகும்
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 7 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்துள்ளது. நான்காம் நாள் ஆட்டமும் மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்க்ஸ் ஐந்தாம் நாளிலாவது முடிவுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்படியும் இந்தப் போட்டி டிரா ஆக உள்ளது. பாகிஸ்தான் அணி ரன் குவிக்காமல் போனாலும் மழை அந்த அணியை காப்பாற்றி இருக்கிறது.


Click it and Unblock the Notifications