2வது டெஸ்ட் போட்டி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகச் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித், லாபுசாக்னே உள்ளிட்ட எதிர்பார்ப்பிற்குரிய வீரர்கள் அடுத்தடுத்து இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்கள் வீழ்ந்தனர்.
நாளைய போட்டியில் ஆட்டம்
ஸ்டீவ் ஸ்மித் கடந்த இரு போட்டிகளிலும் சேர்த்து 10 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னரும் காயம் காரணமாக அணியில் இல்லாத நிலையில், தற்போது தேவை காரணமாக 70 சதவிகித காயங்கள் மட்டுமே குணமாகியுள்ள நிலையில், அவரை நாளைய போட்டியில் ஆஸ்திரேலியா களமிறக்க உள்ளது. ஸ்டீவ் ஸ்மித் கடந்த இரு போட்டிகளிலும் சேர்த்து 10 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னரும் காயம் காரணமாக அணியில் இல்லாத நிலையில், தற்போது தேவை காரணமாக 70 சதவிகித காயங்கள் மட்டுமே குணமாகியுள்ள நிலையில், அவரை நாளைய போட்டியில் ஆஸ்திரேலியா களமிறக்க உள்ளது.
மோசமான பேட்டிங் லைன்-அப்
நாளைய 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் துவங்கி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அந்த அணியின் பேட்டிங் லைன் -அப் மிகவும் மோசமாக உள்ளதாக இந்திய முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பீர் கமெண்ட்
இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியாவுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் லைன் -அப் மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற மோசமான பேட்டிங் லைன் -அப்பை தான் இதுவரை ஆஸ்திரேலிய அணியில் பார்த்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.