
போலீசார் அதிரடி
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய பிரிஸ்டல் கவுன்டி போலீசார், ஸ்டோக்சை கைது செய்துள்ளனர். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடல் தகுதி
எனினும் குற்றச்சாட்டு பதிவு செய்யாமல், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து ஸ்டோக்ஸ் விளையாடுவதற்கான முழு உடல் தகுதி உள்ளதா என்று கிரிக்கெட் வாரியம் ஆலோசித்ததாக தெரிகிறது.

போட்டியில் இல்லை
இதன் முடிவில் வீரர்களின் மோசமான செயல் காரணமாக லண்டன் ஓவல் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடைபெற உள்ள 4வது ஒருநாள் போட்டியில் இருந்து ஸ்டோக்ஸ் மற்றும் ஹேல்ஸ் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி ஆட்டத்தில் இல்லை
அணியிலிருந்து நீக்கப்பட்டதால் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹேல்ஸ் நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. ஸ்டோக்ஸ் ஏற்கனவே 2012, 2013, 2014ல் இதே போன்று குடித்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











